Author

Thanjai Prakash

Thanjai Prakash

தஞ்சாவூரில் தனித்துவமிக்க ஓர் இலக்கிய இயக்கம்போலச் செயல்பட்டவர் தஞ்சை ப்ரகாஷ். வெங்கட் சாமிநாதன், பிரபஞ்சன் போன்ற பல்வேறு ஆளுமைகளின் நண்பர் தஞ்சை ப்ரகாஷ். நிறைய மொழிகளைக் கற்றுக்கொண்டவர். இலக்கியவாதிகள் சந்திப்புக்கென்றே ‘யுவர் மெஸ்’ என்ற உணவு விடுதியை நடத்தியவர். பல சிறுபத்திரிகைகளையும் நடத்தியவர். முழுக்க முழுக்க வெங்கட் சாமிநாதனுக்காக வெ.சா.எ (வெங்கட் சாமிநாதன் எழுதுகிறார்) என்ற சிறுபத்திரிகையை நடத்தியவர். தஞ்சை இலக்கியவாதிகள் மத்தியில் இன்று கிட்டத்தட்ட ஒரு தொன்மம் போல் ஆன வாழ்வு அவருடையது. கடந்த 2000-ல் அவர் தனது 57-வது வயதில் மறைந்தார். ‘கள்ளம்’, ‘கரவமுண்டார் வீடு’ ‘மீனின் சிறகுகள்’ ஆகிய நாவல்களும் அங்கிள், மேபல், தஞ்சை ப்ரகாஷ் கதைகள் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும், என்றோ எழுதிய கனவு என்ற கவிதைத் தொகுப்பும், ‘தஞ்சை ப்ரகாஷ் கட்டுரைகள்’ என்று நூலும் இதுவரை வெளியாகியிருக்கின்றன. (தி இந்து)l